June 1, 2025
நவலோக்கமருத்துவமனை 500 சிறுநீரகமாற்றுஅறுவைசிகிச்சைகளைவெற்றிகரமாகசெய்துசாதனைபடைத்துள்ளது
செய்தி

நவலோக்கமருத்துவமனை 500 சிறுநீரகமாற்றுஅறுவைசிகிச்சைகளைவெற்றிகரமாகசெய்துசாதனைபடைத்துள்ளது

Jul 5, 2024

மூன்றாம் நிலை சுகாதார சேவையில் இலங்கையின் முன்னணியிலுள்ள நவலோக்க மருத்துவமனை குழுமம், 500 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக முடித்துள்ளதாக அண்மையில் அறிவித்தது. சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சையில், ஒரு நபரின் உயிரைக் காப்பாற்ற ஒரு தனித்துவமான அறுவை சிகிச்சையாக இதனைக் கூறலாம். உயிருடன் அல்லது இறந்த நபரிடமிருந்து தானமாக பெறப்பட்ட ஆரோக்கியமான சிறுநீரகம், சிறுநீரகங்கள் சரியாக செயல்படாத ஒரு நோயாளிக்கு அறுவைச் சிகிச்சை மூலம் பொருத்தப்படுகிறது.

சிறுநீரகம் செயலிழந்த நோயாளிகளுக்கு ஆரோக்கியமான சிறுநீரகத்தை மாற்றுவதற்காக அதிநவீன மருத்துவ உபகரணங்களையும் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்தும் நவலோக்க மருத்துவமனை அதன் மூலம் 500 சத்திரசிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்தமை இலங்கையின் சுகாதார வரலாற்றில் பெரும் சாதனையாக குறிப்பிடலாம். நவலோக்க மருத்துவமனையின் சிறுநீரக மாற்று சிகிச்சைப் பிரிவு சிறப்பு வசதிகள் மற்றும் பயிற்சி பெற்ற தாதியர்கள் மற்றும் சுகாதார நிபுணர்களைக் கொண்ட தீவிர சிகிச்சைப் பிரிவைக் கொண்டுள்ளது, இதன் மூலம் சிறுநீரக நன்கொடையாளர்கள் மற்றும் செயற்பட முடியாத நோயாளிகளுக்கு பல சேவைகள் வழங்கப்படுகின்றன.

நவலோக மருத்துவமனையின் வெற்றிக்குப் பின்னால் உள்ள மற்றொரு ரகசியம், இந்த சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகளில் வெற்றிபெற சிறுநீரக நோய்த் துறையைத் தாண்டி நோயாளியின் மனநலம் குறித்து உன்னிப்பாக கவனம் செலுத்துவதாகும். இதன் மூலம், அறுவைசிகிச்சைக்குப் பின்னனர் நோயாளியை படிப்படியாக இயல்பு நிலைக்குக் கொண்டுவரவும், ‘ஆரோக்கியமான உடலுக்கு ஆரோக்கியமான மனதை’ பராமரிக்க அறுவை சிகிச்சைக்கு முன் நன்கொடையாளர்களுக்கும் நோயாளிகளுக்கும் மனநல ஆலோசனைகளை வழங்குவதன் அவசியத்தை வலியுறுத்துகின்றனர்.

இரத்த நாள மாற்று சிகிச்சை நிபுணர்கள், சிறுநீரக மருத்துவர்கள், மயக்கவியல் நிபுணர்கள், பிசியோதெரபிஸ்டுகள், கதிரியக்க நிபுணர்கள், மனநல மருத்துவர்கள், இரத்தமாற்றம் நிபுணர்கள், ஊட்டச்சத்து நிபுணர்கள் மற்றும் பிசியோதெரபிஸ்ட் நிபுணர்கள் ஆகியோரின் திறமையான இலங்கை ஆலோசகர் குழுவை உள்ளடக்கிய தொழில்ரீதியாக தகுதிவாய்ந்த மற்றும் உயர் தகுதி வாய்ந்த நிறுவனமாக நவலோக்க மருத்துவமனைகள் இலங்கையின் சுகாதார சேவையில் அதன் சிறப்பை நிலைநாட்ட முடிந்தது.

மிகவும் வெற்றிகரமான 500 சிறுநீரக சத்திரசிகிச்சைகளை செய்து பலரின் வாழ்வில் ஒளியூட்டுவதற்கு வழிவகுத்த இந்த தனித்துவமான சூழ்நிலையில் நவலோக்க மருத்துவமனையின் மருத்துவ ஊழியர்களின் கடுமையான சுகாதார வழிகாட்டுதல்களை அர்ப்பணிப்பு மற்றும் கடைப்பிடிப்பது பாராட்டப்பட வேண்டியதாகும்.

நவலோக்க மருத்துவமனை குழுமத்தின் தலைவர் கலாநிதி ஜயந்த தர்மதாச இந்த தனித்துவமான நிலைமை குறித்து கருத்து தெரிவிக்கையில், “500 சிறுநீரக சத்திரசிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடிப்பதன் மூலம் இலங்கையின் சுகாதார சேவையில் புதிய மைல்கல்லை எட்ட முடிந்ததை ஒரு கௌரவமாக கருத விரும்புகிறோம். எங்களின் மருத்துவப் பணியாளர்கள் வேலைப்பழு நிறைந்த கால அட்டவணைகள் இருந்தபோதிலும், நோயாளிகளின் நல்வாழ்வை உறுதிப்படுத்த அயராது உழைக்கிறார்கள். அவர்கள் தங்கள் கடமைகளை அயராது ஆற்றிவரும் சேவை சிறப்பானது. அறுவைசிகிச்சைக்குப் பிறகு குணமடைந்து மீண்டும் இயல்பு வாழ்க்கையை அனுபவிக்கத் தயாராக இருக்கும் நோயாளிகளைப் பார்ப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம்.” என தெரிவித்தார்.

நவலோக்க மருத்துவமனை குழுமம், இந்த அனைத்து சிறுநீரக சத்திரசிகிச்சைகளையும் நன்னெறி மீளாய்வுக் குழு மற்றும் இலங்கை சுகாதார அமைச்சின் பூரண அங்கீகாரத்திற்கு உட்பட்டு மேற்கொள்ளும், அரசாங்கத்தினால் வகுக்கப்பட்ட அனைத்து ஏற்பாடுகளுக்கும் இணங்க சேவைகளை வழங்குகிறது. மேலும் உயர்ந்த உலகளாவிய நடைமுறைகளின்படி கடுமையான பாதுகாப்பு தரங்களைப் பின்பற்றி, நவலோக்க மருத்துவமனை குழுமம் நோயாளிகளுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உகந்த சேவையை வழங்க உறுதிபூண்டுள்ளது.

1 Comment

  • I am really inspired together with your writing skills as smartly as with the format to your blog. Is this a paid subject or did you customize it yourself? Anyway stay up the excellent quality writing, it is uncommon to peer a great blog like this one nowadays!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close