
சித்திரைப் புத்தாண்டு நிகழ்வுகளுக்கு அனுசரணை வழங்கிய மெல்வா
இலங்கையின் முன்னணி உறுக்கு கம்பி உற்பத்தியாளரான மெல்வா நிறுவனம், நுவரெலிய நகரில் நடைபெற்ற 2025 ஆண்டுக்கான சித்திரைப் புத்தாண்டு வசந்த கால கொண்டாட்ட நிகழ்வுக்கு அனுசரணை வழங்கியுள்ளது. அதன் பிரதானதொரு நிகழ்வான நுவரெலிய 4×4 கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட Gregory’s Mud Challenge வாகன ஓட்டப் பந்தயத்துக்கு அனுசரணை வழங்கிய பெருமையும் இந் நிறுவனத்தையே சாரும். கடந்த ஏப்பிறல் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் நடைபெற்ற இப் பந்தயத்தை காண பெருந்திரளான மக்கள் வந்திருந்தனர். நுவரெலியவில் நடைபெறும் பிரதான வசந்த கால களியாட்ட நிகழ்வான “சலலிஹினி வசந்தம்” விழா பாரம்பரிய விளையாட்டுக்கள், கலாசார நிகழ்வுகள் மற்றும் இதர பல தனித்துவமான அம்சங்களை கொண்டிருந்ததோடு சகல இனக் குழுமங்களைச் சேரந்த மக்களும் அதில் கலந்துகொண்டனர்.
மெல்வா நிறுவனம் ஏப்பிறல் மாதம் 16 தொடக்கம் 26 ஆம் திகதி வரை ஹிக்கடுவை, கணபத்தேகம, மாத்தறை, திஸ்ஸமஹாராம, மொனராகலை,வெலிமடை, கண்டி, குளியாபிடிய, கலேவெல மற்றும் ராகம உள்ளிட்ட பல பகுதிகளிலும் இடம்பெற்ற சித்திரைப் புத்தாண்டு விழாக்கள் பலவற்றுக்கு அனுசரணை வழங்கியிருந்தது. சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுடன் இணைந்ததான பழக்க வழக்கங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் நடைபெற்ற இந்த விழாக்களில் ஏராளமான மக்கள் கலந்து கொண்டனர். மெல்வா நிறுவனம் இலங்கை கலாசார பாரம்பரியங்களை பாதுகாத்து மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதில் முன்னின்று உழைத்து வருகிறது. வெசாக், தைப்பொங்கல், நத்தார் மற்றும் ரமழான் போன்ற இதர மத மற்றும் கலாசார விழாக்கள் பலவற்றுக்கும் மெல்வா நிறுவனம் தொடர்ச்சியாக அனுசரணை வழங்கி வருகிறது.