June 7, 2025
Dearo Investment நிறுவனத்துக்கு 03 BWIO விருதுகள்
செய்தி

Dearo Investment நிறுவனத்துக்கு 03 BWIO விருதுகள்

May 31, 2025

Dearo Investment நிறுவனம் Business World International விருது விழாவில் 03 விருதுகளை வென்றுள்ளது. சிறந்த நுண், சிறிய மற்றும் மத்தியளவிலான (MSME) நிதி நிறுவனம், சிறந்த கருத்திட்ட நிதி நிறுவனம் மற்றும் சிறந்த தொழில்முயற்சியாண்மை நிதி நிறுவனம் ஆகிய 03 விருதுகளை மேற்படி நிறுவனம் வென்றுள்ளது. Business World International Organization அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட விருது விழாவில் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான பிரசன்ன சஞ்சீவ மேற்படி விருதுகளை பெற்றுக்கொண்டார். நவீன தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் வசதிகளை பயன்படுத்தி நாடெங்கிலும் பரந்தளவில் நிதிச் சேவைகளை வழங்கும் Dearo Investment நிறுவனம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை பெரிதும் வென்றுள்ளது. பிரத்தியேக மற்றும் வணிகக் கடன் திட்டங்கள் தொடங்கி ஸ்மார்ட் முதலீட்டுத் திட்டங்கள் வரை சகல நிதிச் சேவைகளும் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கேற்ற வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேற்படி நிறுவனம் தற்போதுள்ள மற்றும் ஆரம்ப கட்டத்திலுள்ள நுண், சிறிய மற்றும் மத்தியளவிலான தொழில்முயற்சிகளினதும் கூட்டு நிறுவனங்களினதும் மூலதனத்தை உயர்த்துவதற்கு தேவையான தொழில்முயற்சி கடன் திட்டங்கள் பலவற்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

அர்ப்பணிப்புடன் கூடிய தொழில் வல்லுநர்கள் குழுவொன்றின் ஊடாக நடைமுறை மற்றும் முற்போக்கான நிதித் தீர்வுகளை வழங்கும் Dearo Investment நிறுவனத்துக்கு சொந்தமான 30 இற்கும் மேற்பட்ட கிளை அலுவலகங்கள் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ளன. மேலும் பல கிளைகள் விரைவில் தொடங்கப்படவுள்ளன. நுண், சிறிய மற்றும் மத்தியளவிலான தொழில்முயற்சிகளை வலுவூட்டுவதை தமது முதன்மை நோக்கமாக கொண்டு இயங்கும் மேற்படி நிறுவனம் தற்பொழுது நிதிச் சேவைகள், சட்டம், தொழில்முயற்சி உதவிகள், உணவு பானங்கள், சுற்றுலா. கல்வி, தகவல் தொழில்நுட்பம், மென்பொருள், வாகனங்கள், கமத்தொழில், பெருந்தோட்டம் போன்ற பல்வேறு துறைகளை உள்வாங்கும் வகையில் தமது வணிக நடவடிக்கைகளை விரிவுபடுத்தியுள்ளது. பிரசன்ன சஞ்சீவ அவர்களின் தலைமையில் முதன்மையான நிதி நிறுவனமாக தடம் பதித்துள்ள Dearo Investment நிறுவனம் தமது உற்பத்தி மற்றும் சேவைகளை மேலும் விரிவுபடுத்தும் எதிர்பார்ப்பில் உள்ளது. பிரபாஷ் குணரத்ன, உபுல் எதிரிசூரிய, தரிந்து தனஞ்சய சமரவிக்கிரம, நெரஞ்சன் வர்ணசூரிய, திலிணி கல்ஹாரி ஏக்கநாயக்க ஆகியோரை கொண்ட பணிப்பாளர் சபை நிறுவனத்தின் வளர்ச்சிக்கு பெரிதும் பங்களிப்பு செய்து வருகிறது. வணிக மற்றும் கமத்தொழில் துறைகளின் முன்னேற்றத்துக்கு அனுசரணை வழங்குமொரு நிதி நிறுவனமாக நாடெங்கிலும் பிரபலய்மடைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Close