நாட்டின் ஆடைத்துறையில் வேலைவாய்ப்புக்காக மாற்றுத்திறனாளிகளை மேம்படுத்துவதற்கு Inclusive Threads உடன் இணையும் JAAF
இலங்கையின் ஆடைத் தொழிலில் மாற்றுத்திறனாளிகளை ஒருங்கிணைப்பதற்கான ஒரு திட்டம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இது நாட்டின் பணியாளர்களுடன் அவர்களை ஒருங்கிணைப்பதில் ஒரு பெரிய படியை முன்னெடுத்துள்ளது. “Inclusive Threads” என்று பெயரிடப்பட்ட இந்த நிகழ்ச்சி, பல்வேறு குறைபாடுகள் உள்ளவர்களுக்கு அர்த்தமுள்ள வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான பொது மற்றும் தனியார் துறைகளின் திறனை வெளிப்படுத்துகிறது. இந்தத் திட்டத்தை சர்வதேச தொழிலாளர் அமைப்பு மற்றும்
இலங்கையில் நிலவும் தற்போதைய தேங்காய் நெருக்கடியை சமாளிக்க அரசதலையீட்டை கோரும் இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் (CCCI)
இலங்கை தென்னை கைத்தொழில் சம்மேளனம் (CCCI), உள்நாட்டு நுகர்வு மற்றும் இலங்கையின் ஏற்றுமதி சார்ந்த தேங்காய்த் தொழிலுக்கும் அச்சுறுத்தலாக இருக்கும் ஒரு தனித்துவமான தேங்காய் பற்றாக்குறையை சமாளிக்க உடனடியாக அரசு தலையிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. கலாச்சார மற்றும் பொருளாதார அடித்தளமாக, தேங்காய் வீட்டுக்கு தேவையான உணவுக்கும் இன்றியமையாதவை மற்றும் நாட்டிற்கான அந்நிய செலாவணிக்கும் குறிப்பிடத்தக்க மூலமாவும் உள்ளது.
தமது சுகாதாரச் சேவைகளை விரிவுபடுத்தும் இரத்மலானை Queen’s Hospital
இரத்மலானை பகுதியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய Queen’s Hospital Medical Centre மருத்துவமனை தனியார் மருத்துவச் சேவைத் துறையில் உண்மையான மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அல்ட்ரா சவுன்ட், எக்கோ, எக்ஸ்ரே போன்ற மருத்துவத் தொழில்நுட்ப உபகரணங்களை கொண்ட மேற்படி மருத்துவமனை நோயாளர்களின் சுகாதாரப் பிரச்சனைகளுக்கு பயன் தரும் சிகிச்சைகளை பெறுவதற்கு ஏதுவாக சீரான மருத்துவப் பரிசோதனை பெறுபேறுகளை
சீனாவில் BYD உள்ளிட்ட உலகளாவிய தொழில்துறை தலைவர்களுடன் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சந்திப்பு
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் சீன அரசுமுறைப் பயணமானது, இரு நாடுகளுக்கிடையேயான நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்தியதோடு, புதிய பொருளாதார ஒத்துழைப்புகளுக்கான வாய்ப்புகளையும் உருவாக்கியுள்ளது. இப்பயணத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக, BYD உள்ளிட்ட சீனாவின் முன்னணி உலகளாவிய நிறுவனங்களின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல்கள் அமைந்தன. இது புத்தாக்கம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கான பரஸ்பர அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டியது. இதன்போது 2025 பெப்ரவரி முதலாம்
Sunshine Foundation for Goodஇன் 20வதுநீர் சுத்திகரிப்பு அலகு சேனகமவில் திறந்து வைக்கப்பட்டது
தியசரண திட்டத்தின் மூலம் இலங்கை வாழ் மக்களின் வாழ்வில் நன்மையைக் கொண்டுவருவதற்கான தனது உறுதிப்பாட்டை சன்ஷைன் வலியுறுத்துகிறது மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் சமூகம் எதிர்கொள்ளும் நீர் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும் தொடர்ந்து உறுதியளிக்கும் முயற்சியாக, சன்ஷைன் ஹோல்டிங்ஸின் கார்ப்பரேட் சமூகப் பொறுப்பு (CSR) பிரிவான சன்ஷைன் ஃபவுண்டேஷன் ஃபார் குட் (SFG), அதன் 20வது RO Plantஐ ஆரம்பித்தது.
பாணந்துறை நகரில் தனது புதிய கிளையை நிறுவிய HNB FINANCE
இலங்கையின் முன்னணி நிதி நிறுவனமான HNB FINANCE PLC தனது புதிய கிளையை பாணந்துறையில் திறந்துள்ளதன் மூலம், அதன் கிளை விஸ்தரிப்பின் மற்றுமொரு கட்டத்தை அடைந்துள்ளது. HNB FINANCEஇன் இந்த புதிய கிளை இல. 31/1, ஹொரணை வீதி, பாணந்துறையில் அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது. HNB FINANCEஇன் பாணந்துறை புதிய கிளை திறப்பு நிகழ்விற்கு நிறுவனத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று
2024 TAGS விருது வழங்கும் நிகழ்வில் வெண்கலப் பதக்கம் வென்ற HNB FINANCE
இலங்கையின் பட்டயக் கணக்காளர் நிறுவனத்தினால் வருடாந்தம் ஏற்பாடு செய்யப்பட்ட TAGS விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் Shangri-La ஹோட்டலில் பிரமாண்டமாக நடைபெற்றதுடன் HNB FINANCE வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் பிரிவில் வெண்கல விருதை வென்றது (20 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான குழும சொத்துக்களுடன்). TAGS விருது வழங்கும் நிகழ்வில் HNB FINANCE தொடர்ந்து மூன்றாவது முறையாகவும், நிதி அறிக்கையிடல் மற்றும்
இலங்கையர்களின்புன்னகைக்குவலுவூட்டும் DENTA வின் ‘வளரும் புன்னகைக்கான பல் பராமரிப்பு’ நிகழ்ச்சித் திட்டம்
மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையர்களின் வாய் ஆரோக்கியத்திற்காக அர்ப்பணிக்கப்பட்ட முன்னணி வர்த்தக நாமமான DENTA, அதன் தனித்துவமான ‘வளரும் புன்னகைக்கான பல் பராமரிப்பு’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கு பல் ஆரோக்கியத்தின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளது. பாடசாலை மாணவர்களுக்கு வாய் ஆரோக்கியம் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தல் மற்றும் அவர்களுக்காக இலவச பற்சிகிச்சை மருத்துவ முகாம்களை
இலங்கை இளைஞர்களை அறிவியல், தொழில்முனைவு மற்றும் TikTok மூலம் வலுப்படுத்தும் ‘சஞ்சய எல்விடிகல’
இன்று வரை வெறும் பொழுதுபோக்கு தளமாக பயன்படுத்தப்பட்ட TikTok, தற்போது அறிவைப் பகிர்ந்து கொள்ளும் தளமாக மாறியுள்ளது என்பது இரகசியமல்ல. பொழுதுபோக்குடன் கல்வியை இணைத்து உருவாக்கப்பட்ட ‘EduTok’ அதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். அதன் காரணமாகவே, இத்தகைய உள்ளடக்கங்களை TikTok இல் சேர்க்கும் சிறப்பு படைப்பாளிகள் பலர் உருவாகி வருவதை காண முடிகிறது. அறிவியல், தொழில்முனைவு மற்றும் ‘EduTok’ உள்ளடக்கங்களை
வளர்ச்சி மற்றும் புத்தாக்கத்தை ஊக்குவிக்கஇரண்டு முக்கிய நியமனங்களை அறிவிக்கும் HNB
ஹட்டன் நேஷனல் வங்கி (HNB) பிமல் பெரேராவை துணை பொது முகாமையாளராகவும் மற்றும் தலைமை வளர்ச்சி அதிகாரியாகவும், சந்திம குரேயை துணை பொது முகாமையாளராகவும் மற்றும் தலைமை புத்தாக்க அதிகாரியாகவும் நியமிப்பதாக அறிவித்து மகிழ்ச்சியடைகிறது. இந்த சிரேஷ்ட தலைமைக் குழுவில் இந்த புதிய நியமனங்கள் வங்கியின் வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கும், இன்றைய மாறும் வணிகச் சூழலில் புத்தாக்கத்தை முன்னெடுப்பதற்கும் உள்ள அர்ப்பணிப்பை

